போதை கரை புரண்டோடும் காலம் தன்னில்
மேதைகளாய் வாழ்வதற்கு வழி கூறும் நாம்
போதை தன்னை விரட்டிடவே
புல்லுருவிகளாய் நிற்கின்றோம்
மதியை மாற்றி புழுதியில் பிறழ்வாய்
மதி மயங்கும் போதைகளோ என் நிறைந்தவை
வாழ்வோடு கதை பேசி திசை மாற்றிடும்
வன்மமவன் குணத்தினிலே வேரூன்றிவிடும்
இதையாவும் பேசுவது போதை தானே
இழித்திடுவோம் உலகினிலே இவற்றை நாமே
உறவென்று நாம் பேசும் பேச்சினை எல்லாம்
பிறவென்று மாற்றிடுது போதை அரக்கன்
உறவோடும் துணையோடும் ஒன்று சேர்ந்து
உலகத்தில் உயர்த்திடுவோம் உண்மை தன்னை
தாய் தந்தை உறவு தன்னை பிரித்து வைக்கும்
லாகிரி தான் போதை எனும் விஷக்கிருமி
நற்றாற்றில் கைவிட்ட பேதைகளாய்
நடுநடுங்கி வாழ்வு தன்னை இழந்திடுவார்
மானிடா நீ மனிதனாய் பிறந்து விட்டாய்
ஏன் தான் நீ மடையனாய் மாறிவிட்டாய்
மண்ணுலகில் வாழுமட்டும் மாண்புடனே
மாறிட நீ புத்திதனை பெற்றிடுவாய்
நண்பர்களாய் உனை நாடும் நண்பர்களை நீ
நம்பிக் கொண்டு கேட்டுவிட்டால் உன் வாழ்க்கை
நாகைப்பினிலே போயிடுமே கண்டிடுவாய்
நல்லுலகில் வாழ்வதற்கு வழியை பார் நீ
போதையெனும் அரக்கனே கொன்று நீயும்
பூமி தன்னில் நிலைத்திடுவாய் நாளும் நீயும்
போற்றிடுவார் புகழ்ந்திடுவார் பூவுலகு தன்னில்
பொன்மணியாய் வாழ்ந்திடுவாய் என்றும் நீயும்...
Let's say NO to drugs.

காலத்தின் தேவை... சிறந்த வரிகள்
ReplyDeleteTYSM
Delete🙌
ReplyDeleteThe poem looks very realistic..and a nice motivation for current generation 👏👏
ReplyDeleteThank you soo much
DeleteAwesome content❤️
ReplyDeleteTNX
DeleteThanks <3
ReplyDelete